மத்தியப்பிரதேசத்தில் பெண் குழந்தை பிறந்ததால் தாய்க்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் டிவாஸ் மாவட்டம் நரியஹிடா என்ற கிராமத்தை சேர்ந்த லட்சுமிக்கும் பப்லு ஜாலா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இதற்கிடையில் கடந்த ஆண்டு இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் அதிருப்தி அடைந்தது பப்லுவும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து லட்சுமியை அடித்து கொடுமை படுத்தி உள்ளனர். மேலும் லட்சுமியின் கை, கால்களில் சூடு வைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.
இதையடுத்து தகவலறிந்த லட்சுமியின் குடும்பத்தினர் அவரை மீட்டதோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லட்சுமி கணவர் குடும்பத்தினரை கைது செய்து விசாரணை நடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.